Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதில் மட்டுமே மம்தா கவனம் செலுத்துகிறார்: கவர்னர் குற்றச்சாட்டு

ஏப்ரல் 25, 2020 07:50

சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதே மேற்குவங்க முதல்வர் மம்தாவின் நோக்கம் என அம்மாநில கவர்னர் ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும், மாநில கவர்னர் ஜகதீப் தன்கருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், மாநில அரசின் செயல்பாடுகளில் கவர்னர் தலையீடு செய்வதாக குற்றம்சாட்டி, கவர்னருக்கு மம்தா கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில் கவர்னர் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தோல்வியடைந்ததை மூடி மறைக்க, மம்தா இதுபோன்ற போக்கை கடைபிடிக்கிறார். அரசியல் மோதல் போக்கால், மேற்கு வங்க மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகின்றனர். தோல்வியை மறைக்க மம்தா எடுக்கும் முயற்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சிறுபான்மை சமூகத்தினரை திருப்திப்படுத்த மம்தா வெளிப்படுத்தும் கருத்துக்கள் துரதிருஷ்டவசமானவை. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மோதல் அரசியலை மம்தா கைவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்